Tuesday, 8 June 2021

கம்பரும்   நரசிம்மரும்

கம்பன் - இந்த பெயர் காரணம் என்ன? கம்பம் என்றல் தூண் . கம்பன் என்றால் தூணில் இருந்து  வந்தவன அல்லது தூணை இருப்பவன் அல்லது தூண் போன்றவன் அல்லது தூணுக்கு சொந்த காரன். ஆகவே கம்பன் என்ற பெயரே நரசிம்ம தெய்வத்தை குறிப்பது ஆகும்.

கம்பர் நரசிம்மரின்  பக்தர்  என்பதற்கு எடுத்துக்காட்ட அவன் "இரண்ய வதை படலத்தை" இராமாயணத்தில் சேர்ந்ததுதான். அந்த படலத்தில் அவன் இறைவனின் அஷ்டாக்ஷர மந்திரத்தை போற்றும்  வகையில் செய்யுளிட்டு இருக்கிறார்

'மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும்
எண் இல் பூதங்கள், நிற்பன திரிவன, இவற்றின்
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்,
எண்ணுகின்றது இவ் எட்டு எழுத்தே; பிறிது இல்லை.


மேலும் அவர் கம்பத்தில் இருப்பதை பின் வரும் பாட்டில் ஒலிக்கிறார்

'"உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டிடாயேல்,
கும்பத் திண் கரியைக் கோள் மாக் கொன்றென, நின்னைக் கொன்று, உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்" என்றான். 

அவரின் பெயர் "தூணான்" என்று இருக்கலாம் ? ஆனால் கம்பன்  என்று ஏன் இருக்க வேண்டும்ம்? வடமொழியில் "ஸ்தூணா " என்பதுதான் "தூண்"
. "கம்பம்" என்பதும் வடமொழி சொல் தான் . ஆனால் "ஸ்தூணா" என்பது வடமொழியில் "ஸ்திரி லிங்கம்" (பெண் பால்), "கம்பம்" என்பது "புலலிங்கம்" (ஆண் பால்). அதனால் தான் "கம்பன்" என்று குறிப்பது சரியாக இருக்கும்.

மேலும் கம்பரின் இராமாயணம் இறை அருள் பெற்றதை என்பதை நிரூபிக்க சிதம்பரத்தில் "நாகம்" குறித்த பாடலை பாடினார், நாகம் வந்தது. அதை பார்த்தவுடன் அங்கிருக்கும் தீக்ஷிதர்களால் இது இறை அருள் பெற்றது என்று ஆசீர்வதிக்கப்பட்டது. அதே போல் அவர் திருவரங்கம் வந்து "இரண்ய வதை படலத்தை" பாடியவுடன் எதிரில் இருக்கும் மேட்டு அழகிய சிங்கர்  (நரசிம்மர்) சந்நிதியில் பலத்த சிங்கத்தின் உறுமல் கேட்டது. அங்கிருந்த வைணவர்களாலும் இந்த நூல் ஆசீர்வதிக்கப்பட்டது.

கம்பர் தன பெயராலும், வான்மீகத்தில் இல்லாத ஹிரண்ய வதை படலத்தை இங்கே சேர்த்ததால், நரசிம்மரே இந்த நூலை ஆசீர்வாதம் செய்ததாலும் , அவர் ஒரு நரசிம்ம பக்தர் என்பது அறிய முடிகிறது

--
மால்மன்னன்












No comments:

Post a Comment