Wednesday, 15 August 2018

பாட்டுக்கொரு புலவன் பாரதியடா - அவன்
பாட்டை தினம் ஒருவன் பாடினானாட
கேட்டு கிரு கிருத்து  போனேனடா

- நாமக்கல் கவிஞர் 

Monday, 14 May 2018

ஒரு எண்ணம்:

"Salary Bandhitha"  என்று அந்த இளநீர் விற்பவர் ஒரு கணவன் மனைவியிடம் இளநீர் வெட்டி கொடுத்துக்கொண்டே சிரித்து  பேசி கொண்டு இருந்தார்.

தென்னை குலையில் இருந்து கொலை செய்யப்பட்ட பல இளநீர் தேங்காய்கள் அந்த மரத்தடியில்.

எனக்கும் தாகம் எடுக்க, தண்ணீர் மட்டுமே உள்ள காய் வாங்கி குடிக்கும் நான், முன் நாள் கேட்ட ஒரு ஒளி பதிவில், இளநீரில் உள்ள வழுக்கையோடு உண்பது வயிற்றில் உள்ள புண்களுக்கு நல்லது என்பது நினைவுக்கு வர , "ganjee காய் இதியா " என்று கேட்டேன்.

பின்பு "சரி , தண்ணி காய் குடுங்கம்மா" என்றேன், நகை இல்லா  கழுத்தில் மஞ்சள் தாலி கண்டவுடன்.

"தமிழங்கா " என்றார் அந்த அம்மா?

"ஆமாங்க" என்றேன்

"எந்த ஊரு  ?" என்றார்கள்

"Madrasamma , ஒன்னு இங்க குடிக்க , ரெண்டு parcel , நீங்க எந்த ஊரு ?" என்றேன்

"தர்மபுரீங்க " என்று ஒரு இளநீர் வாயை பிளந்தாள்

"தரமபுரியேவா? Straw  வேண்டாங்க, அப்பிடியே குடிக்கிறேன்"  என்றேன்

"இல்லங்க, அதியமான் பேட்டை, தர்மபுரீலேந்து  சேலம் போற வழி, கேள்வி பட்டு இருக்கீங்களா? இங்க வந்து 14 வருஷம் ஆச்சு" என்றாள்

"கேள்வி பட்டது இல்லீங்க, ஆனால் நிறைய பேரு இங்க தர்மபுரிலேந்து இருகாங்க" , "உங்க பசங்க படிக்கறாங்களா?" கிட்டதிட்ட எல்லா அடித்தள மக்களை நான் கேட்கும் கேள்வி.

"ரெண்டு பொண்ணுங்க.ஆமாங்க, படிக்கறாங்க. இங்கிலீஸ் Medium ஆனா தமிழ் ஒரு பாடம் உண்டு"

ஆச்சர்யத்துடன் நான். "இங்க  ஸ்கூல்ல தமிழ் சொல்லி கொடுக்கறாங்களா?"

"உண்டுங்க, இங்க  தியாகராஜ நகர் ஸ்கூல்ல சொல்லிக்கொடுக்கறாங்க"

"Govt  ஸ்கூலாங்க ?"

"ஆமாங்க, உங்க பசங்க எங்க படிக்கறாங்க?"

"மல்லசந்தரல படிக்கறாங்க"

"இந்தாங்க பார்சல் இளநீர், மூணு இளநீர், 105 ரூபா".

சரியான சில்லறை கொடுத்தேன்.

தமிழ் மொழிக்கு அரசாங்கத்தால் நடத்தப்படும் பள்ளிகள் உள்ளனவே! ஞான பீட விருது பெற்றோரில் மாஸ்தியின் தாய் மொழி தமிழ் ஆயிற்றே? மேலக்கோட்டையில் ஆழவார்கள்  திருவாய்மொழி ஓத படுகிறதே?
தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்கள் தலையில் இவை ஏற்றப்படவேண்டும்

அதேபோல், உகாதிக்கு தமிழ்நாட்டில் பொது விடுமுறை, திராவிட இயங்கத்தின் தலைவர் பெரியார் ஒரு கன்னடிகர், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஞானக்கூத்தன்  கன்னடிகர். உலகமே போற்றி வணங்கிடும் காஞ்சி மஹாஸ்வாமிகள் பூர்வர்கள் ஹொய்சால கன்னட ப்ராஹ்மணர்கள்.
இவை யாவும் கர்நாடகாவில் உள்ள கன்னடிகர்களின் செவியில் படிய பட வேண்டும்

சாளுக்யனும் பல்லவனும்  சண்டை இட்டது ஒரு அதிகார போட்டி. மொழிகளின் போட்டி அல்ல. மக்களுக்குள் ஆனா போட்டி அல்ல. இவையே இன்றும் தொடர்கிறது

மொழி என்பது என்ன? எண்ணங்களின் வெளிப்பாடு. மொட்டில் இருந்து மகரந்தங்கள் வெளியேறுவது போல், அந்த வெளிப்பாடு அலங்கரிக்க படும்பொழுது அழகிய இலக்கியம் ஆகிறது.   இதில் எண்ணமே அடிப்படை

காஞ்சி மஹாஸ் வாமிகள் "மனத்துக்கண் மாசிலன் ஆதல்" என்ற குறள்  இறை பக்தியின் விளைவு, மனம் மாசற்றதாக வேண்டும் என்று அருளி இருக்கிறார்
எனவே "மனத்துக்கண் மாசிலன்" வெளிப்படுத்தும் மொழி எதுவாக இருந்தால் என்ன? மனதின் தூய்மை, தெளிவான எண்ணங்களின் வெளிப்படுத்தல் முக்கியமே தவிர மொழி அல்ல.

நீருக்கான போராட்டம், மொழியின் மீது கல் எறியப்பட்டு , மக்களின் போராக மாற்றும் . மேலே சொன்ன ஒரு சம்பவம், தமிழ் மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டும்.

எண்ணங்களின் செழுமையே செழுமை அல்ல
மொழியின் பழமை மட்டும்






Sunday, 11 February 2018

கம்பன் - பெயர் காரணம் - என் பார்வை 

கம்பன் - இந்த பெயர் கரணம் என்ன? கம்பம்   என்றால் தூண் . கம்பன் என்றால் தூணில் இருந்து வந்தவன்  அல்லது தூணில்  இருப்பவன் அல்லது தூண் போன்றவன் அல்லது தூணுக்கு சொந்த காரன். ஆகவே கம்பன் என்ற பெயரே நரசிம்ம தெய்வத்தை குறிப்பது ஆகும்

கம்பர் நரசிம்மரின்  பக்தர்  என்பதற்கு எடுத்துக்காட்ட அவர்  "இரண்ய வதை படலத்தை" இராமாயணத்தில் சேர்ந்ததுதான். அந்த படலத்தில் அவன் இறைவனின் எட்டெழுத்து  மந்திரத்தை போற்றும்  வகையில் செய்யுளிட்டு இருக்கிறார் 

'மண்ணின் நின்று மேல் மலர் அயன் உலகு உற வாழும்
எண் இல் பூதங்கள், நிற்பன திரிவன, இவற்றின்
உள் நிறைந்துள கரணத்தின் ஊங்கு உள உணர்வும்,
எண்ணுகின்றது இவ் எட்டு எழுத்தே; பிறிது இல்லை.


மேலும் அவர் கம்பத்தில் இருப்பதை பின் வரும் பாட்டில் ஒலிக்கிறார் 

'"உம்பர்க்கும் உனக்கும் ஒத்து, இவ் உலகு எங்கும் பரந்துளானை,
கம்பத்தின் வழியே காண, காட்டுதி; காட்டிடாயேல்,
கும்பத் திண் கரியைக் கோள் மாக் கொன்றென, நின்னைக் கொன்று, உன்
செம்பு ஒத்த குருதி தேக்கி, உடலையும் தின்பென்" என்றான். 

அவரின் பெயர் "தூணான்" என்று இருக்கலாம் ? ஆனால் கம்பன்  என்று ஏன் இருக்க வேண்டும்ம்? வடமொழியில் "ஸ்தூணா " என்பதுதான் "தூண்"
. "கம்பம்" என்பதும் வடமொழி சொல் தான் . ஆனால் "ஸ்தூணா" என்பது வடமொழியில் "ஸ்திரி லிங்கம்" (பெண் பால்), "கம்பம்" என்பது "புலலிங்கம்" (ஆண் பால்). அதனால் தான் "கம்பன்" என்று குறிப்பது சரியாக இருந்து இருக்கும் .

மேலும் கம்பரின் இராமாயணம் இறை அருள் பெற்றதை என்பதை நிரூபிக்க சிதம்பரத்தில் "நாகம்" குறித்த பாடலை பாடினார், நாகம் வந்தது. அதை பார்த்தவுடன் அங்கிருக்கும் தீக்ஷிதர்களால் இது இறை அருள் பெற்றது என்று ஆசீர்வதிக்கப்பட்டது. அதே போல் அவர் திருவரங்கம் வந்து "இரண்ய வதை படலத்தை" பாடியவுடன் எதிரில் இருக்கும் மேட்டு அழகிய சிங்கர்  (நரசிம்மர்) சந்நிதியில் பலத்த சிங்கத்தின் உறுமல் கேட்டது. அங்கிருந்த வைணவர்களாலும் இந்த நூல் ஆசீர்வதிக்கப்பட்டது

கம்பர் தன பெயராலும், வான்மீகத்தில் இல்லாத இரணிய வதை படலத்தை இங்கே சேர்த்ததால், நரசிம்மரே இந்த நூலை அங்கீகரித்ததாலும் , அவர் ஒரு நரசிம்ம பக்தர் என்பது அறிய முடிகிறது. அவர் பெயரான "கம்பர்" என்பது நரசிம்ம தெய்வத்தை குறிப்பது என்பது என் கருத்து 

-- அரங்கராஜன் 
மொழிக்கெல்லாம் மூத்தவளே , மூப்பரியா இளையவளே

நாவின் உள் செல்லும் உணவோ  வயிறுக்கு குளிர்மை
நாவின்  வெளி செல்லும் பாவோ  மனதுக்கு  இனிமை

உன்னை சொல்லின் என்  எச்சிலும் ஆகிறது புனிதம்
குறளாய்  நீ வந்து சொன்ன மனிதம்

மனிதன் போற்றும் புனிதனும்,  உன் பின் செல்கிறான்
மாயத்தை தோற்று வித்தவன் மயங்கி நிற்கிறான்

என்றும் மறையாத மறை
மறை போற்றும் மாபெரும் இறை
இறை  வணங்கும் நீ எனக்கு பறை

யாரும் இல்லா பொழுதினில் என் அகத்தில்  நீ இருக்க
புறமானாய் நீ எனக்கு பேச்சின் காற்று வெளி வர

மொழி பேசா மௌனத்தில் ஞானம் மலரும்
மொழியே ஞானமாய் நீ இருக்க
மௌனத்தின் ஞானமே அஃஞானமாய் ஆனதே 

கவிகள் எல்லாம் அலங்கரித்த உன் அழகை
கணினிகளும் காண துடிக்கின்றன  
அறிவியலும், பொறியியலும் உன்னை தரிசிக்க இருக்கின்றன 
வானியலும்  கோளியலும் உன் வரும் திசையை நோக்கு கின்றன

சுண்ட காய்ச்சிய பாலில் திரண்டு வரும் பாலாடையில்
சக்கரையின் பாகு கலந்து, குங்கும பூ மேலிட்டு
பக்குவமாய்க்கு ருசிக்க நாவுக்கு இனிமையோ?
இல்லை
"தமிழ்" என்று என்று ஒரு வார்த்தை போதும் எனக்கு
வையத்தின் முழு அமிர்தம் என் நாவில்