Tuesday, 19 August 2014

கங்கை கொண்டானை ! மால் தான் தங்கை கொண்டானை!!
முப்புரம் எரித்த முக்கண்ணனை!!
பிறை சூடனை !! மறை போற்றும்  வேந்தனை!
நம் நெஞ்சம் கறை போக்கும் நாதனை!
தன்  கால்  அணைத்த பாலனை ; காலனை அழித்து அணைதானை !
மாலனும்  மால் மகனும் தன் அகத்துளே உடையானை !
ஆதி  கருவானை !! கருகாவூர் நாயகி மனம் கவர்ந்தானை !
பூசலனையும் தன்னை எசுவனயும் நேசிக்கும்  நிலாதுண்டனை !
நன்னெறி வழுவா தொண்டர்கள் பாவம் கழுவும் மழுவானை !
விடை ஏறும் வாழ்வின் விடையை!
தடை போக்கும் தயாளனை !
நாவிற்கினிய தேனை ! நினைந்து நினைந்து அழுதேன்!தொழுதேன்!

No comments:

Post a Comment